அதிக மருந்து பாவனையால் இரத்த வாந்தி எடுத்து குடும்பஸ்த்தர் பலி! யாழ்.வடமராட்சியில்...

ஆசிரியர் - Editor I
அதிக மருந்து பாவனையால் இரத்த வாந்தி எடுத்து குடும்பஸ்த்தர் பலி! யாழ்.வடமராட்சியில்...

அதிக மருந்து பாவனையால் இரத்த வாந்தி எடுத்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

வடமராட்சி இமையான் பகுதியை சேர்ந்த இராசா சிவபாதம் (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார்.

வீட்டில் இரத்த வாந்தி எடுத்த நிலையில் , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.

அதிகளவான மருந்து பாவனையால், உயிரிழப்பு ஏற்பட்டது என அறிக்கையிடப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர், கடந்த 08 மாத காலமாக  உளநோய்க்கு உள்ளான நிலையில் அதற்கு சிகிச்சை பெற்று அதற்கான மருந்துகளை பாவித்து வந்தவர் என உறவினர்கள் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு