மாணவனை அடித்து ஆசிரியர் ஹீரோயிசம்!! சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டிய மானிப்பாய் பொலிஸார் சமரசம் செய்த வினோதம்...

ஆசிரியர் - Editor I
மாணவனை அடித்து ஆசிரியர் ஹீரோயிசம்!! சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டிய மானிப்பாய் பொலிஸார் சமரசம் செய்த வினோதம்...

யாழ்.வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் மீது அதே பாடசாலை அதிபர் தாக்குதல் நடத்தியதில் மாணவனின் முகத்திலுள்ள நரம்பு பாதிக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது. 

பாதிக்கப்பட்ட மாணவன் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் முக நரம்பில் பாதிப்பு ஏற்பட்டமையும் தெரியவந்தது.

இந்நிலையில் இரு தரப்பினரையும் அழைத்த மானிப்பாய் பொலிசார் மாணவன் பாதிக்கப்பட்டமை தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கையை பின்பற்றாமல் சமரசம் செய்து அனுப்பியுள்ளனர்.

மாணவன் தாக்கப்பட்டமை இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாக கூறப்பட்டாலும் பாடசாலையுடன் இணைந்து மாணவனின் பெற்றோரை அழைத்து

பொலிஸார் சமரசம் செய்து அனுப்பியமை ஒரு தரப்பினரை காப்பாற்றும் நோக்கம் கொண்டதா? என எண்ணத் தோன்றுகின்றது.

குறித்த சமபவம் தொடர்பில் வலிகாம வலையாகக் கல்விப்பணிப்பாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது சம்பவம் நடந்ததையும்,  பொலிசார் சமரசம் செய்தமையை உறுதிப்படுத்தினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு