6ம் வகுப்பு மாணவனின் செவிப்பறை பாதிக்கடும் அளவுக்கு கன்னத்தில் அறைந்த ஆசிரியர்! மாணவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..

ஆசிரியர் - Editor I
6ம் வகுப்பு மாணவனின் செவிப்பறை பாதிக்கடும் அளவுக்கு கன்னத்தில் அறைந்த ஆசிரியர்! மாணவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..

யாழ்.வலிகாமம் வலயத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில்  தரம் 6ல் கல்வி கற்கும்  மாணவனின் கன்னத்தில்  ஆசிரியர் அறைந்ததில் மாணவனின் செவிப்பறை பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த மாணவனுக்கு பாடசாலை ஆசிரியர் கடந்த 31 ஆம் திகதி பாடசாலையில் வைத்து தாக்கியுள்ளார்.

குறித்த மாணவனுக்கு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காதினாள்  நீர் வடிந்ததை அவதானித்த பெற்றோர் மாணவனை விசாரித்துள்ளனர்.

இதனையடுத்து மாணவன் தனக்கு நடந்த சம்பவத்தை பெற்றோர்களுக்கு தெரியப்படுத்திய நிலையில் மாணவனை யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மாணவனை பரிசோதனை செய்த வைத்தியர்கள் மாணவரின் செவிப்பறை பாதிப்புக்கு உள்ளாகியமையை உறுதி செய்துள்ளனர்.

மாணவர்களை ஆசிரியர் தாக்கும் சம்பவங்கள் கடந்த இரு மாதங்களாக அதிகரித்து உள்ள நிலையில் வடமாகாண கல்வி அமைச்சு இதுவரை குற்றம் செய்த ஆசிரியர்களுக்கு நிர்வாக ரீதியான ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்ததாக தெரியவரவில்லை.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு