யாழ்.மாவட்டத்தில் 15 சிறார்களுக்கு பிறப்பு பதிவே இல்லை! யாழ்.மாவட்டச் செயலர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 15 சிறார்களுக்கு பிறப்பு பதிவே இல்லை! யாழ்.மாவட்டச் செயலர்..

யாழ்.மாவட்டத்தில் பிறப்பு பதிவற்ற 15 சிறுவர்கள் காணப்படுவதாக யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நீதிமன்ற வழக்குகள் மற்றும் தந்தை தாய் இடையேயான முரண்பாடு, பெற்றோரின் அக்கறையின்மை உள்ளிட்ட காரணங்களால் பிறப்பு பதிவுகள் மேற்கொள்ளப்படவில்லை.

இவ்வாறு கடந்த காலாண்டில் பிறப்பு பதிவற்ற சிறுவர்களின் எண்ணிக்கை 104 ஆக காணப்பட்டபோதும் பல்வேறு பட்ட தொடர்  முயற்சிகளுக்கு பின்னர் 89 பேருக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இன்னமும் 15 பேருக்கே பிறப்பு சான்றிதழ் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு