யாழ்.மாவட்ட மீனவர்கள் 3 பேர் தமிழகம் - வேதாரண்யம் கடற்பகுதியில் மீட்கப்பட்டனர்...

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட மீனவர்கள் 3 பேர் தமிழகம் - வேதாரண்யம் கடற்பகுதியில் மீட்கப்பட்டனர்...

படகு பழுதடைந்த நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 3 மீனவர்களுடன் படகு தமிழகம் - வேதாரண்யம் பகுதியில் கரையொதுங்கியுள்ளது.

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியை அற்புதராஜா ஸ்ரீகாந்தன் (வயது 37) , வல்வெட்டித்துறையை சேர்ந்த சு. சிவகுமார் மற்றும் குருநகரை சேர்ந்த றொபின்சன் றீகன் (வயது 24) ஆகிய மூவருமே கரையொதுங்கியுள்ளனர். 

எழுவை தீவில் இருந்து கடந்த 06ஆம் திகதி கடற்தொழிலுக்காக படகொன்றில் சென்ற வேளை படகு பழுதடைந்த நிலையில், 

வேதாரண்யம் பகுதியில் கரையொதுங்கியதாக கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர் 

அவர்களை தமிழக கடலோர காவல் படையினர் மீட்டு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு