அரசியல்வாதிகளின் தாளத்துக்கு ஆடுவதை ஆளுநர் நிறுத்தவேண்டும் - இலங்கை ஆசிரியர் சங்கம்...

ஆசிரியர் - Editor I
அரசியல்வாதிகளின் தாளத்துக்கு ஆடுவதை ஆளுநர் நிறுத்தவேண்டும் - இலங்கை ஆசிரியர் சங்கம்...

அரசியல்வாதிகளின்  கடிதங்களின் அடிப்படையில் வடமாகாண ஆளுநர் இடமாற்றங்களை வழங்க உத்தரவிடுவது இடமாற்றச்சபை தீர்மானங்கள், கல்வி தொடர்பான சுற்றுநிருபங்களை மீறிய செயலாகும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின்  உப தலைவர் தீபன் திலீபன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

வடமாகாண ஆளுநர் அரசியல்வாதிகளை திருப்திப்படுத்தவும், தனது தனிப்பட்ட அரசியல் நலன்களுக்காகவும் முறையற்றவகையில் செயற்படுவது வடமாகாண கல்வியை சீரழிக்க துணைபோகும் செயற்பாடாகும்.  

ஆளுநரின் இத்தகைய அருவருப்பான செயற்பாட்டை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்த முறையற்ற செயற்பாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் - வடமாகாண கல்வியமைச்சும், வடமாகாண கல்வித் திணைக்களமும் 

வடமாகாண ஆளுநருக்கு அவரது தவறுகளை சுட்டிக்காட்டி மாகாண கல்வியில் அரசியல் தலையீட்டை நிறுத்த முன்வரவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு