ஹெரோயின் போதைப் பொருளுடன் நகைக்கடை உரிமையாளரின் மனைவி கைது! மனைவியை தாக்கிய கணவரும் கைது...

ஆசிரியர் - Editor I
ஹெரோயின் போதைப் பொருளுடன் நகைக்கடை உரிமையாளரின் மனைவி கைது! மனைவியை தாக்கிய கணவரும் கைது...

யாழ்.நகரிலுள்ள உள்ள  நகைகடை ஒன்றின் உரிமையாளரின் மனைவி 80 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மனைவியை பொலிஸ் நிலையத்திற்குப் பார்க்கவந்த கணவன் பொலிஸ் நிலையத்தில் வைத்து மனைவியை சரமாரியாக தாக்கிய நிலையில் கணவனையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்.பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைக்கோட்டை - பழம் வீதி பகுதியில் நீண்ட காலமாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 36 வயது டைய பெண் ஒருவர்


இன்றைய தினம் யாழ்.மாவட்டபொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து

80மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட பெண் விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு