அதிகளவு ஹெரோயின் போதைப் பொருளை நுகர்ந்த இளைஞன் சாவு! யாழ்ப்பாணத்தில்..

ஆசிரியர் - Editor I
அதிகளவு ஹெரோயின் போதைப் பொருளை நுகர்ந்த இளைஞன் சாவு! யாழ்ப்பாணத்தில்..

ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவில் நுகர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குருநாகல் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞனே நேற்றைய தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் யாழ்ப்பாணத்தில் தங்கி நின்றி மின் சாதன பொருட்களை விற்பனை செய்து வந்தவர் எனவும்,

நேற்றைய தினம் கல்வியங்காட்டு பகுதியில் மயங்கி விழுந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞனின் உயிரிழப்பு , இளைஞன் அதிகளவில் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்தமையே காரணம் எனவும், 

மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் திடீர் மரண விசாரணை அதிகாரி ந. பிரேமகுமார் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு