யாழ்.பண்ணை பாலத்தில் பொலிஸ் புலனாய்வு பிரிவினால் ஒருவர் கைது! 500 போதை மாத்திரைகள் மீட்பு...

ஆசிரியர் - Editor I
யாழ்.பண்ணை பாலத்தில் பொலிஸ் புலனாய்வு பிரிவினால் ஒருவர் கைது! 500 போதை மாத்திரைகள் மீட்பு...

யாழ்.பண்ணைப் பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் நேற்று மாலை (03) கைது செய்யப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விசாந்த தலைமையிலான யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலில் அடிப்படையில் அவர் கைதாகியுள்ளார்.

பண்ணைப் பாலத்தில் குறித்த சந்தேகநபர் சுற்றி வளைக்கப்பட்டதுடன் அவரிடமிருந்து 500 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளத்தை சேர்ந்த 23 வயதான குறித்த சந்தேகநபர் மேலதிக விசாரணைக்காக யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு