யாழ்.கல்வியங்காடு பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்திற்குள் புகுந்து வன்முறை கும்பல் தாக்குதல்! உரிமையாளர் காயம்...

ஆசிரியர் - Editor I
யாழ்.கல்வியங்காடு பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்திற்குள் புகுந்து வன்முறை கும்பல் தாக்குதல்! உரிமையாளர் காயம்...

யாழ்.கல்வியங்காடு பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் உரிமையாளர் மீது தாக்குதல் நடத்திய நிலையில் காயமடைந்த வைத்தியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூவரடங்கிய வன்முறை கும்பல் ஒன்று இரவு கடைக்குள் புகுந்து கண்ணாடி அலுமாரி, சோடா போத்தல்கள் என்பவற்றை அடித்து நொறுக்கி உரிமையாளர் மீது தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளது. 

உரிமையாளருக்கும், அவரது சகோதரருக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு