யாழ்.நகரை அண்டிய பகுதியில் வீடு உடைத்து கொள்ளை! சந்தேகநபரை மடக்கியது பொலிஸ்...

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரை அண்டிய பகுதியில் வீடு உடைத்து கொள்ளை! சந்தேகநபரை மடக்கியது பொலிஸ்...

யாழ்.நகரை அண்டிய பகுதியில் உள்ள வீடொன்றை உடைத்து கொள்ளையடித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 30ஆம் திகதி உடைத்து , வீட்டில் இருந்த சுமார் 2 இலட்சத்து 75ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

நகை கொள்ளை தொடர்பில் உரிமையாளரால் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு