யாழ்.மானிப்பாய் பகுதியில் 4 இடங்களில் உண்டியல் உடைத்துக் கொள்ளை! 35 வயதான சந்தேகநபர் கைது...

ஆசிரியர் - Editor I
யாழ்.மானிப்பாய் பகுதியில் 4 இடங்களில் உண்டியல் உடைத்துக் கொள்ளை! 35 வயதான சந்தேகநபர் கைது...

யாழ்.மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதுமலை அம்மன், வைரவர், பிள்ளையார் கோவில்களில் 4 நாட்களுக்கு முன்னர் உண்டியல் உடைத்து கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸில் முறைப்பாடும் பதிவு செய்துள்ளனர் இதனை யாழ்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கீழ் இயங்கும் யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர்,

அதன் சிசிடி கமரா உதவியுடன் இன்று குறித்த சந்தேக நபரை வண்ணார் பண்னை சிவன் கோவிலடி முன்னால் உள்ள உணவகத்தில் வைத்து கைது செய்து விசாரித்தனர் அவரிடம் இருந்து ஒரு தொகை உண்டியல் பணங்களும் மிட்கபட்டது.

கொழும்புத்துறை துண்டியை சேர்ந்த 35வயதுடையநபர் ஏற்கனவே யாழ் நகரபகுதியில் ஐந்து கோயில்களில் உண்டியல் உடைக்ப்பட்டு யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் ஏற்கனவே கைது செய்யபட்டு 

3மாதம் வரை சிறையில் இருந்து அன்மையில்தான் வெளிவந்ததாக குறிப்பிடதக்கது

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு