யாழ்.பல்கலைகழக சிரேஷ்ட விரிவுரையாளர் தனேஷ்வரி இரவீந்திரன் பேராசிரியையாக பதவி உயர்வு..

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழக சிரேஷ்ட விரிவுரையாளர் தனேஷ்வரி இரவீந்திரன் பேராசிரியையாக பதவி உயர்வு..

யாழ்.பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். 

வணிக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரைப் பேராசிரியராகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் வழங்கியது. 

பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் (29), சனிக்கிழமை காலை, துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது. 

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த 

மனித வள முகாமைத்துவத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி (திருமதி) தனேஸ்வரி இரவீந்திரனின் மதிப்பீடு மற்றும் நேர்முகத் தேர்வு முடிவுகள் பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

அவற்றின் படி, மனித வள முகாமைத்துவத் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி திருமதி தனேஸ்வரி இரவீந்திரன் மனித வள முகாமைத்துவத்தில் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு