மாதாவிடம் நேர்த்தி வைத்தும் பலன் கிடைக்காத கோபத்தில் மாதா சொரூபங்களை உடைத்தேன்..

ஆசிரியர் - Editor I
மாதாவிடம் நேர்த்தி வைத்தும் பலன் கிடைக்காத கோபத்தில் மாதா சொரூபங்களை உடைத்தேன்..

மாதாவிடம் நேர்த்தி வைத்தும் பிள்ளை கிடைக்காத விரக்தியிலேயே ஆனைக்கோட்டையில் மாதா சிலைகளை சேதப்படுத்தியதாக கைதான நபர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் - மானிப்பாய் பொலிஸ் பிரிவில் ஆறுக்கு மேற்பட்ட இடங்களில் மாதா சிலைகள் நேற்று அதிகாலையில் சேதப்படுத்தப்பட்டிருந்தன.

குறித்த சம்பவம் தொடர்பில் சுதுமலை தெற்கு, சாவல்காடு பகுதியை சேர்ந்த 32 வயதான ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைதாகியிருந்தார்.

அவர் சைவ சமயத்தை சேர்ந்தவர். மனைவி கிறிஸ்தவர். இருவரும் திருமணம் செய்து சில வருடங்களாகி பிள்ளைகள் கிடைக்காத விரக்தியில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

“பிள்ளை வேண்டுமென மாதவிடம் நேர்த்தி வைத்தேன். பிள்ளை கிடைக்காத விரக்தியில் இருந்தேன். இதனால் மாதா சிலைகளை சேதப்படுத்தினேன்“ என தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு