யாழ்.கல்வியங்காட்டில் உயிரிழந்த சிறுமி கொழும்பு/ சாவகச்சேரி பகுதிகளிலும் வீட்டு பணிப் பெண்ணாக வேலை செய்துள்ளாராம்...

ஆசிரியர் - Editor I
யாழ்.கல்வியங்காட்டில் உயிரிழந்த சிறுமி கொழும்பு/ சாவகச்சேரி பகுதிகளிலும் வீட்டு பணிப் பெண்ணாக வேலை செய்துள்ளாராம்...

யாழ்.கல்வியங்காடு பகுதியிலுள்ள வீடொன்றில் பணிப் பெண்ணாக தங்கவைக்கப்பட்டிருத்த நிலையில் உயிரிழந்த சிறுமி இதற்கு முன்னர் இரு வீடுகளில் பணிப் பெண்ணாக விடப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில்  மேலும் தெரியவருவதாவது, கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் 17 வயதான கேதீஸ்வரன் தர்மிகா என்ற சிறுமி தவறான முடிவால் உயிரிழந்தார்.

குறித்த சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில் பல முக்கிய விடயங்கள் கசிந்துள்ளது.

குறித்த சிறுமி ஏற்கனவே கொழும்பு மற்றும் சாவகச்சேரி ஆகிய பகுதிகளில் வீட்டு பணி பெண்ணாக அமர்த்தப்பட்ட நிலையில் இறுதியாக யாழ்ப்பாணத்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் விரிவுரையாளராக கடமையாற்றும் பெண் தனது வயதான பெற்றோரை பார்ப்பதற்காக வேலைக்கு அமர்த்தியுள்ளார்.

சிறுமியை வேலைக்கு அமர்த்திய விதம் முறையற்றதாக காணப்படுகின்ற நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு