தாயின் 2வது கணவனால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட 13 வயது சிறுமி - கோப்பாயில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
தாயின் 2வது கணவனால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட 13 வயது சிறுமி - கோப்பாயில் சம்பவம்..

யாழ்.கோப்பாய் பகுதியில் தாயின் 2வது கணவரால் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக, கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் , இரண்டாம் தாரமாக திருமணம் செய்துள்ளார்.

தனது முதல் தாரத்தின் மூன்று பிள்ளைகளுடன் , இரண்டாம் தாரத்துடன் குடும்பம் நடாத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், தாயின் இரண்டாவது கணவர் , சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு  கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, 

பொலிஸார் சிறுமியை மீட்டு வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு