பளை - தும்புத் தொழிற்சாலையில் தீ விபத்து!

ஆசிரியர் - Editor I
பளை - தும்புத் தொழிற்சாலையில் தீ விபத்து!

பளை - இந்திராபுரம் பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தும்பு தொழிற்சாலையொன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று சனிக்கழமை (22) இரவு இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் பல இலட்சம் பெறுமதியான இயந்திரங்கள், 

தும்புகள் மற்றும் உபகரணங்கள் முழுவதுமாக எரிந்து நாசமாகியுள்ளதாக தும்பு தொழிற்சாலை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (21) வவுனியா - ஈரப்பெரியகுளம் பகுதியில் உள்ள தும்பு தொழிற்சாலையிலும் திடீரென தீ பரவியிருந்தது.

தற்போது நிலவும் அதிக வெப்பம் மற்றும் காற்றுடன் கூடிய வானிலை காரணமாக பொதுமக்கள் திறந்தவெளிகளில் தீ மூட்டும்போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு