செருப்பால் அடிக்கப்பட்ட வர்த்தகர் பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து மரணம்!

ஆசிரியர் - Editor IV
செருப்பால் அடிக்கப்பட்ட வர்த்தகர் பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து மரணம்!

யாழ்ப்பாணம் - பண்ணைக்கு முன்பாக உள்ள கடையொன்றின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

கடையின் உரிமையாளரான யாழ்ப்பாணத்தை சேர்ந்த செல்வரத்தினம் ஹரீந்திரனிடம், ஓடுகளை கடனுக்கு வாங்கியவர் பணத்தைக் கொடுக்காததால், வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதன் போது கடை உரிமையாளரை, கடன் வாங்கியவர் செருப்பால் தாக்கியுள்ளார். இதனை தொடர்ந்து அவர் இது குறித்து முறைப்பாடு பதிவு செய்வதற்காக யாழ். பொலிஸ் நிலையத்திற்கு சென்ற நிலையில் அங்கு மயங்கி விழுந்துள்ளார்.

இதன்பின்னர் அவரை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அவர் நேற்றுமுன் தினம் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், உயிரிழந்தவரது சடலம் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு