தங்கையின் முடியை கத்தரித்த கனடா அக்கா! - அளவெட்டியில் சம்பவம்.

ஆசிரியர் - Editor IV
தங்கையின் முடியை கத்தரித்த கனடா அக்கா! - அளவெட்டியில் சம்பவம்.

யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் சகோதரிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் தங்கையின் தலைமுடியை அக்கா கத்தியை கொண்டு வெட்டிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.     

யாழ்ப்பாணம் அளவெட்டியில் சகோதரிகள் இருவர் வசித்து வந்துள்ளனர். இதேவேளை, திருமணம் முடிந்து அக்கா கணவனுடன் கனடாவில் வசித்து வந்துள்ளார்.

இலங்கையில் சில நாட்கள் தங்கிருப்பதற்காக கனடாவில் இருந்து கணவனுடன் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது தங்கையின் வீட்டுக்கு வந்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை காலை அக்கா தனது தாலிக்கொடி மற்றும் தங்க சங்கிலியை தங்கையிடம் கொடுத்து விட்டு வெளியே சென்று மாலை வீடு திரும்பி உள்ளார்.

இதையடுத்து, திங்கட்கிழமை அன்று வேறுவொரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக தங்கையிடம் கொடுத்த தாலிக்கொடி மற்றும் தங்க சங்கிலியை கேட்டுள்ளார். தங்கையும் தாலிக்கொடியை கொண்டு வந்து அக்காவிடம் கொடுத்துள்ளார்.

இதன்போது அக்கா தங்கையிடம் நான் தாலிக்கொடியுடன் தங்க சங்கிலியை கொடுத்தாக கூறியுள்ளார். இதற்கு தங்கை தாலியை மட்டுதான் கொடுத்ததாக கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கையில் வாய்தற்கமாக இருந்த பிரச்சனை சிறிது நேரத்தில் கோபமடைந்து பாரிய சண்டையாக மாறியது. இதனையடுத்து இருவரும் தலைமுடியை பிடித்துக்கொண்டு சண்டை போட்டுள்ளனர்.

அக்காவின் கணவர் இதனை அவதனித்து விரைந்து வந்து அவர்களை பிரித்து வைத்துள்ளனர். இதேவேளை அக்கா, தங்கை ஏமாற்றியதை தாங்கமுடியாமல் கத்தியை எடுத்து தங்கையின் தலை முடியை வெட்டியுள்ளார்.

மேலும் இதனால் மிகவும் கோபமடைந்த தங்கை வெட்டிய தலைமுடியுடன் பொலிஸ் நிலையம் சென்று அக்கா மீது முறைப்பாட்டை அளித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு