யாழ்.துன்னாலையில் விசேட அதிரடிப்படையினால் ஒருவர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.துன்னாலையில் விசேட அதிரடிப்படையினால் ஒருவர் கைது!

யாழ்.வடமராட்சி - துன்னாலை பகுதியில்  ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உடுப்பிட்டி வடக்கு கம்பர் மலை பகுதியைச் சேர்ந்த 43 வயதானவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

கைதானவரிடமிருந்து ஒரு கிராம் 960 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டது.

விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த நபர் நெல்லியடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சந்தேக நபரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு