போதைக்கு அடிமையான 22 வயது இளைஞனை புனர்வாழ்வுக்கு உட்படுத்த மல்லாகம் நீதிமன்றம் உத்தரவு..

ஆசிரியர் - Editor I
போதைக்கு அடிமையான 22 வயது இளைஞனை புனர்வாழ்வுக்கு உட்படுத்த மல்லாகம் நீதிமன்றம் உத்தரவு..

போதைக்கு அடிமையான இளைஞனை கந்தகாடு புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பி புனர்வாழ்வுக்கு உட்படுத்த மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மானிப்பாய் பகுதியில் கடந்த புதன்கிழமை போதைப்பொருளுடன் கைதான 22 வயதான மானிப்பாய் பகுதி இளைஞனை பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் வியாழக்கிழமை முற்படுத்தினர்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளில் இளைஞன் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என கண்டறியப்பட்டதை அடுத்து , இளைஞனை பொலநறுவை கந்தக்காடு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்புமாறு மன்று உத்தரவிட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு