யாழ்.ஆனைக்கோட்டையில் கோடா மற்றும் ஹெரோயினுடன் பெண் உட்பட இருவர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.ஆனைக்கோட்டையில் கோடா மற்றும் ஹெரோயினுடன் பெண் உட்பட இருவர் கைது!

யாழ்.ஆனைக்கோட்டை பகுதியில் ஹெரோயினுடன்  ஆணும், கோடாவுடன் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

குறித்த பகுதியில் செவ்வாய்க்கிழமை இளைஞன் ஒருவர்  ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தக் கைது இடம்பெற்றது.

40 மில்லிகிராம் ஹெரோயினுடன் 24 வயதான இளைஞரே கைதுசெய்யப்பட்டார்.

சந்தேகநபரை மேலதிக விசாரணையின் பின் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, ஆனைக்கோட்டைப் பகுதியில் கோடாவுடன் கைதுசெய்யப்பட்ட பெண்ணை பிணையில் செல்ல அனுமதித்து வழக்கு தவணையிடப்பட்டுள்ளது என்று மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

புலனாய்வுத் தகவலுக்கமைய சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் 28 லீற்றர் கோடாவை பெண்ணொருவரிடமிருந்து மீட்டனர். 

சந்தேக நபர் கடந்த திங்கட்கிழமை மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். நீதிமன்று சந்தேக நபரை பிணையில் செல்ல அனுமதித்து வழக்கை தவணையிட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு