யாழ்.அச்சுவேலியில் குடும்ப பெண் மீது வாள்வெட்டு! பல கோணங்களில் விசாரணை..

ஆசிரியர் - Editor I
யாழ்.அச்சுவேலியில் குடும்ப பெண் மீது வாள்வெட்டு! பல கோணங்களில் விசாரணை..

யாழ்.அச்சுவேலியில் வீடு புகுந்து நேற்று இரவு பெண் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முகத்தை துணியால் மறைத்தவாறு இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் குறித்த வீட்டில் ஜன்னல் கதவு என்பவற்றை அடித்து உடைத்து பெட்ரோல் குண்டு வீசி வீட்டின் பல பொருட்களை எரித்து சேதமாக்கியுள்ளனர்.


வீட்டில் இருந்த 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான நந்தகுமார் சுதர்சினி என்பவர் பலத்த காயங்களுக்குள்ளாகி அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக குற்றத்தடுப்பு மற்றும் தடயவியல் பொலிசார் பல்வேறு கோணங்களில்  தீவிர விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு