யாழ்.அச்சுவேலி - பத்தமேனியில் வீடு புகுந்து வாள்வெட்டு குழு அட்டகாசம்! பெற்ரோல் குண்டு வீச்சு, பெண் ஒருவர் காயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.அச்சுவேலி - பத்தமேனியில் வீடு புகுந்து வாள்வெட்டு குழு அட்டகாசம்! பெற்ரோல் குண்டு வீச்சு, பெண் ஒருவர் காயம்..

யாழ்.அச்சுவேலி - பத்தமேனியிலுள்ள வீடு ஒன்றின் மீது  நேற்றிரவு 9.20 மணியளவில் பெட்ரோல் குண்டு வீசியதுடன் வீடு புகுந்து தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது.

முகத்தை துணியால் மறைத்தவாறு இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் குறித்த வீட்டில் ஜன்னல் கதவு என்பவற்றை அடித்து உடைத்து பெட்ரோல் குண்டு வீசி வீட்டின் பல பொருட்களை எரித்து சேதமாக்கியுள்ளனர்.

வீட்டில் இருந்த 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயார் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிசார் பல்வேறு கோணங்களில்  விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு