12 வயதான சிறுவனுக்கு வாயில் சூடுவைத்த தாயின் 2வது கணவர்! கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
12 வயதான சிறுவனுக்கு வாயில் சூடுவைத்த தாயின் 2வது கணவர்! கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை..

12 வயது சிறுவனுக்கு வாயில் சூடு வைத்த நபரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். குறித்த நபர் சிறுவனின் தாயாருடைய 2வது கணவர் என கூறப்படுகிறது.

வசாவிளான் மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் 12 வயதான மாணவன் வாய் மற்றும்  முகத்தில் நெருப்பினால் சுட்ட காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

விசாரணைகளின் போது சிறுவனின் தாயின் இரண்டாவது கணவரே, சிறுவனுக்கு சூடு வைத்ததாகவும் , சூடு வைத்த காயங்கள் வெளியில் தெரியாதவாறு முககவசம் அணிந்து சிறுவனை வெளியில் நடமாட விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் பலாலி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதுடன் ,  சிறுவனுக்கு சூடு வைத்த நபரை கைது செய்வதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு