யாழ்.தீவக வலயத்தில் பாடசாலை மாணவியை தாக்கிய குற்றச்சாட்டில் அதிபர் கைது!!

ஆசிரியர் - Editor I
யாழ்.தீவக வலயத்தில் பாடசாலை மாணவியை தாக்கிய குற்றச்சாட்டில் அதிபர் கைது!!

யாழ்.தீவக வலயத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 9 வயதான மாணவியை தாக்கிய குற்றச்சாட்டில் பாடசாலை அதிபரை ஊர்காவற்துறை பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) கைதுசெய்துள்ளனர்.

மாணவியை பாடசாலையில் வைத்து அதிபர் கடுமையாக தாக்கியதில் மாணவியின் உடலில் தழும்புகள் ஏற்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பத்துள்ளது.

இந்நிலையில், மாணவி தாக்கப்பட்டமை குறித்து மனித உரிமை ஆணைக்குழு பொலிஸாரிடம் வினாவியபோது, தாம் அதிபரை கைதுசெய்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், 

நாளை திங்கட்கிழமை (17) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் அதிபரை முற்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை இச்சம்பவம் தொடர்பிலான உத்தியோகபூர்வ விசாரணைகளை நாளை திங்கட்கிழமை முன்னெடுக்கவுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு