வடமாகாண இ.போ.ச சாலைகளுக்கு 24 பேருந்துகள் கையளிப்பு!

ஆசிரியர் - Editor I
வடமாகாண இ.போ.ச சாலைகளுக்கு 24 பேருந்துகள் கையளிப்பு!

இந்தியாவின் கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்ட பேருந்துகளில் 24 பேருந்துகள் வடமாகாண இ.போ.ச சாலைகளிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று வியாழக்கிழமை (13) இடம்பெற்ற நிகழ்வில் பேருந்துகள் கையளிக்கப்பட்டது.

அந்தவகையில் வவுனியா 4, கிளிநொச்சி 4, மன்னார் 3, முல்லைத்தீவு 3, யாழ்ப்பாணம் 4, பருத்தித்துறை 3, காரைநகர் 3 என 24 பேருந்துகள் வடமாகாண சாலைகளுக்கு பகிரப்பட்டது.

குறித்த நிகழ்வில் போக்குவரத்து பெருந்தெருக்கள் ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தன, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, 

யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் எஸ்.எம்.டி.அல்விஸ், 

பாராளுமன்ற உறுப்பினர்களான ஜயந்த கெட்டகொட, ரகுமான் மற்றும் போக்குவரத்து சபை ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு