நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் கருத்துக்களை கண்டித்து யாழ்.மாவட்ட சட்டத்தரணிகள் பணிப் புறக்கணிப்பு..

ஆசிரியர் - Editor I
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் கருத்துக்களை கண்டித்து யாழ்.மாவட்ட சட்டத்தரணிகள் பணிப் புறக்கணிப்பு..

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தமிழ் நீதிபதிகள் தொடர்பாக தெரிவித்த கருத்தினைக் கண்டித்து யாழ்.மாவட்டத்தில்  சட்டத்தரணிகள் இன்றையதினம் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டனர்.

யாழ்.மாவட்ட சட்டத்தரணிகள் நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்காது இருக்க தீர்மானித்ததாக மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் பா.தவபாலன் தெரிவித்தார்.

சரத் வீரசேகரவின் கருத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்ற முன்றலில் அடையாள கண்டனப் பேரணியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த கண்டனப் பேரணியில் எமது சங்கத்தின் உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள் என யாழ்.மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு