எரிபொருள் நெருக்கடிகால முறுகல்!! யாழ்.காரைநகரில் முகமூடி அணிந்த வன்முறை கும்பல் சகோதரர்கள் 3 பேர் மீது சரமாரி வாள்வெட்டு...

ஆசிரியர் - Editor I
எரிபொருள் நெருக்கடிகால முறுகல்!! யாழ்.காரைநகரில் முகமூடி அணிந்த வன்முறை கும்பல் சகோதரர்கள் 3 பேர் மீது சரமாரி வாள்வெட்டு...

யாழ்.காரைநகர் - வலந்தலை பகுதியில் சகோதரர்கள் 3 பேர் மீது முகமூடி அணிந்த வன்முறை கும்பல் வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணியாற்றும் இளைஞர் ஒருவருக்கும் வெளி இடத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்குமிடையில் எரிபொருள் நெருக்கடி காலத்தில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியரும் வெளி இடத்தை சேர்ந்த இளைஞருக்கும் இடையில் மீண்டும் நேற்றுமுன்தினம் மாலை வாய்த்தர்க்கம் ஏற்பட்டதுடன் மோதலும் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இடம்பெற்ற அன்று இரவே எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணியில் இருந்தபோது முகமூடிகளுடன் அங்குவந்த வன்முறை கும்பல் 

எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியரையும் தடுக்கவந்த அவருடைய இரு சகோதரர்களையும் சரமாரியாக வாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த 28 வயதான இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையிலும் மற்றய இருவரும் காரைநகர் - வலந்தலை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு