யாழ்.கல்வியங்காட்டில் கணக்காளர் கடத்தல்!! பெண் தலமையிலான குழு துணிகரம்...

ஆசிரியர் - Editor I
யாழ்.கல்வியங்காட்டில் கணக்காளர் கடத்தல்!! பெண் தலமையிலான குழு துணிகரம்...

கணக்காளர் ஒருவரை கடத்திச் சென்ற பெண் ஒருவர் தலைமையிலான குழுவினர் 13 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு கடத்திய இடத்திலேயே விட்டுச் சென்றுள்ளனர்.

யாழ்.கல்வியங்காடு பகுதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 

அரியாலை - நாயன்மார்கட்டு பகுதியை சேர்ந்த 69 வயதான கணக்காளர் ஒருவர் புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு காணி ஒன்றை விற்பனை செய்வதாக கூறி 13 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளார்.

எனினும் காணியை விற்காத கணக்காளர் வாங்கிய பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார்.

இந்நிலையில் காணி வாங்க வருபவர்போல் தொலைபேசியில் பேசி கணக்காளரை கல்வியங்காடு பகுதிக்கு அழைத்த கடத்தல் கும்பல் வாகனம் ஒன்றில் கடத்திச் சென்றுள்ளதுடன்,

13 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு கடத்திய இடத்தில் திரும்பி கொண்டுவந்து விட்டுள்ளனர். இந்நிலையில் கணக்காளர் சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு