லைட்டர் வெடித்ததில் தீக்காயங்களுக்கு உள்ளான குடும்பப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

ஆசிரியர் - Editor I
லைட்டர் வெடித்ததில் தீக்காயங்களுக்கு உள்ளான குடும்பப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லைட்டர் வெடித்து தீப்பெட்டியதில் தீக்காயங்களுக்கு உள்ளான குடும்பப் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார்.

பளை -  இந்திராபுரத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயந்தன் கேதீஸ்வரி (வயது 33) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சமையலுக்காக எரிவாயு அடுப்பை லைட்டர் மூலம் பற்றவைக்க முயன்ற வேளையில் அது வெடித்து அணிந்திருந்த ஆடையில் தீப்பற்றியுள்ளது.

எரிகாயங்களுக்கு இலக்கான நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காகக் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி  நேற்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு