யாழ்.நகரிலுள்ள சைவ உணவகத்தில் மக்களுடன் உணவருந்திய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா..

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரிலுள்ள சைவ உணவகத்தில் மக்களுடன் உணவருந்திய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா..

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா யாழ்.நகரில் உள்ள சைவ உணவகம் ஒன்று உணவருந்தி உள்ளார்.

மூன்று நாள் விஜயமாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மதியம் யாழ் நகரில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் மக்களுடன் மக்களாக அமர்ந்து சைவ உணவை உண்டுள்ளார்.

தொடர்ந்து உணவகத்தில் உணவு உண்பதற்காக வருகை தந்தவர்களுடன் சினேகபூர்வமாக கலந்துரையாடியதுடன்,

முன்னாள் ஜனாதிபதியுடன் உணவகத்தில் நின்றவர்கள் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் உடனிருந்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு