அப்துல் கலாமுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மைத்திரிபால சிறிசேனா..

ஆசிரியர் - Editor I
அப்துல் கலாமுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மைத்திரிபால சிறிசேனா..

யாழ்.பொது நூலகத்துக்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்ட இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான அப்துல் கலாமின் உருவாச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மூன்று நாள் விஜயமாக யாழ்ப்பாணம் வருகைதந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுவரும் நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை 2ம் நாள் யாழ்.பொது நூலகத்தை பார்வையிட்டார்.

நூலகத்திற்கு வருகைதந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை யாழ்.மாநகர ஆணையாளர் ஜெயசீலன் வரவேற்றார்.

நூலகத்தின் பிரதான பகுதிகளை முன்னாள் ஜனாதிபதி பார்வையிட்டதுடன் இந்திய அரசாங்கத்தினால் கட்டிக் கொடுக்கப்பட்ட இந்தியன் கோனார் பகுதியையும் பார்வையற்றார்.

அத்தோடு பொது நூலகத்தின் வாசகர் பகுதி, வாசிப்பு பகுதி, தகவல் தொழில்நுட்பப் பகுதி, சிறுவர் பகுதி மற்றும் மாநாட்டு மண்டபத்தையும் பார்வையிட்டார்.

குறித்த நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் சயின் வாஸ் குணவர்தன,

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துஷ்மந்த சமீர, அங்கஜன் இராமநாதனின் பிரத்தியோகச் செயலாளர் சிவராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு