யாழ்.கல்லுண்டாய் பகுதியில் கோர விபத்து!! இருவர் சம்பவ இடத்திலேயே பலி..

ஆசிரியர் - Editor I
யாழ்.கல்லுண்டாய் பகுதியில் கோர விபத்து!! இருவர் சம்பவ இடத்திலேயே பலி..

யாழ்.நகர் பகுதிக்கு அண்மித்த  கல்லுண்டாய் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர். 

இந்த விபத்து இன்றைய தினம் வியாழக்கிழமை மதியம் இடம்பெற்றுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. 

குறித்த விபத்தில் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த , யாழ்.போதனா வைத்திய சாலை தாதிய உத்தியோகஸ்தரான மகேஸ்வரன் மயூரன் ( வயது 37) 


மற்றும் அவருடன் பயணித்த வாகனங்கள் பழுது பார்க்கும்(மெக்கானிக்) அராலி மத்தியை சேர்ந்த ஜெயசுந்தரம் சரோஜன் (வயது 29) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு