இந்து மாநாட்டை புறக்கணித்த வடக்கு ஆளுநர்!! வருவார் என காத்திருந்தும் ஏமாற்றம்...

ஆசிரியர் - Editor I
இந்து மாநாட்டை புறக்கணித்த வடக்கு ஆளுநர்!! வருவார் என காத்திருந்தும் ஏமாற்றம்...

யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக மாநாடு இன்று வியாழக்கிழமை யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.

நல்லூரில் ஆரம்பமான மாநாட்டுக்கான பேரணி யாழ்.வீரசிங்கம் மண்டபத்தை வந்தடைந்த நிலையில் தேசியக்கொடி ஏற்றுவதற்காக,

பிரதம விருந்தினராக அழைக்கப்பட்ட வடமாகாண ஆளுநர் நிகழ்வுக்கே வராமையால் நிகழ்வில் கலந்து கொண்ட விருந்தினர்களும் மக்களும் வெளியில் காத்திருக்க  வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.


இறுதியில் ஆளுநர் வருகைதராத சூழ்நிலையில் தேசிய கொடியினை யாழ்.மாநகர ஆணையாளர் ஜெசீலன் ஏற்றினர்.

இந்நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணி கேவி தவராசா ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக  செயலாளர் இளங்கோவன் முன்னாள் 

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு