யாழ்.பரமேஷ்வரா சந்தியில் உள்ள தொலைபேசி திருத்தும் கடையில் தொலைபேசி திருடியவர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.பரமேஷ்வரா சந்தியில் உள்ள தொலைபேசி திருத்தும் கடையில் தொலைபேசி திருடியவர் கைது!

யாழ்.திருநெல்வேலி - பரமேஷ்வரா சந்தியில் உள்ள தொலைபேசி திருத்தகத்தில் தொலைபேசி திருடிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருத்தகத்திற்கு நேற்று முன்தினம் திங்கட்கிழமை வந்த இளைஞன் அங்கிருந்த கையடக்க தொலைபேசி ஒன்றினை திருடி சென்றுள்ளார். 

அதனை கடை உரிமையாளர் கடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கமராவில் கண்டதை அடுத்து , கண்காணிப்பு கமரா வீடியோ பதிவுடன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். 

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த போலீசார் வீடியோ பதிவு ஊடாக இளைஞனை அடையாளம் கண்டு , இளைஞனை  கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட இளைஞனிடம் விசாரணைகளை முன்னெடுத்த போது , திருடிய கையடக்க தொலைபேசியை தான் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ததாகவும் , வாங்கியவரை தனக்கு அடையாளம் தெரியாது எனவும் கூறியுள்ளார். 

குறித்த நபரிடம் கையடக்க தொலைபேசியை வாங்கிய நபர் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ள நிலையில் , கைது செய்யப்பட்டுள்ள நபரிடமும் தொடர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு