யாழ்.நகரில் வன்முறை கும்பலை சுற்றிவளைத்த பொலிஸார்! தப்பி ஓடிய 5 பேர் கைது, மேலும் பலரை தேடுகிறது பொலிஸ்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரில் வன்முறை கும்பலை சுற்றிவளைத்த பொலிஸார்! தப்பி ஓடிய 5 பேர் கைது, மேலும் பலரை தேடுகிறது பொலிஸ்..

யாழ்.நகர் பகுதியில் இரு வன்முறை குழுக்கள் மோதலுக்க தயாரான நிலையில் பொலிஸாரை கண்டதும் தப்பி ஓடிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்.நகர் பகுதிக்கு அண்மையில் இரண்டு வன்முறை கும்பல்களை சேர்ந்தவர்கள் தமக்குள் மோதிக்கொள்ள தயாராக உள்ளதாக யாழ்.பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்துள்ளனர்.

பொலிஸாரை கண்டதும் , மோதலுக்கு தயார் நிலையில் இருந்தவர்கள் தப்பியோடியள்ளனர். தப்பியோடியவர்களை துரத்தி சென்ற பொலிஸார் அவர்களில் ஐவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கூரிய ஆயுதங்களை பொலிஸார் மீட்டுள்ளதுடன் , தப்பியோடிய ஏனையவர்களையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் ஞாயிற்று கிழமை இடம்பெற்றுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு