யாழ்.குருநகரில் அதிரடிப்படையினரால் இளைஞன் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.குருநகரில் அதிரடிப்படையினரால் இளைஞன் கைது!

யாழ்.குருநகர் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , குருநகர் ஐந்து மாடி வீட்டு தொகுதிக்கு அருகில் குறித்த இளைஞனை கைது செய்து சோதனையிட்டபோது, 07 கிராம் 05 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாண பொலிஸாரிடம் இளைஞனையும், மீட்கப்பட்ட போதைப்பொருளையும் பொலிஸ் விசேட அதிரடி படையினர் ஒப்படைத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு