யாழ்.அல்லைப்பிட்டியில் மீட்க்கப்பட்ட எலும்பு எச்சம் சுமார் 20 வருடங்களுக்கு முந்தையதாக இருக்கலாம் - பொலிஸார்..

ஆசிரியர் - Editor I
யாழ்.அல்லைப்பிட்டியில் மீட்க்கப்பட்ட எலும்பு எச்சம் சுமார் 20 வருடங்களுக்கு முந்தையதாக இருக்கலாம் - பொலிஸார்..

யாழ்.அல்லைப்பிட்டி பகுதியில் நேற்று புதன்கிழமையும்(21) சில மனித  எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அல்லைப்பிட்டி பகுதியில் கட்டுமானங்களின்  பொழுது மண்டை ஓட்டு துண்டுகளும் இரு எலும்புகளும் மீட்கப்பட்டிருந்த நிலையில் 

ஊர்காவற்துறை பொலிஸார் குறித்த பிரதேசத்தை குற்றம் நிகழ்ந்த பிரதேசமாக அடையாளப்படுத்தி நீதிமன்ற கட்டளையை பெற நேற்று நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

இந்நிலையில் நீதிமன்ற கட்டளையினை பெற்று ஊர்காவற்துறை நீதிவான் கஜநிதிபாலன் முன்னிலையில் குறித்த குழி மேலதிகமாக  அகழப்பட்ட நிலையில் 27 பற்கள் உட்பட  ஒரு மனித  எலும்புகூடு எச்சம் மீட்கப்பட்டிருந்தது.

 மேலதிகமான எச்சங்கள் இல்லாத நிலையில் குறித்த சான்று பொருள் ஆய்விற்காக அனுப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் 20 வருடங்களுக்கு முன்னரான மனித எச்சமே இது என கருதுவதாக ஊர்காவற்றுறை பொலிசார் தெரிவித்தனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு