2023 தரம் - 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு திகதி அறிவிக்கப்பட்டது...

ஆசிரியர் - Editor I
2023 தரம் - 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு திகதி அறிவிக்கப்பட்டது...

2023ம் ஆண்டுக்கான தரம் - 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 15ம் திகதி நடைபெறும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஜூன் 15 ஆம் திகதி முதல் ஜூலை 6 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தரவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 

ஜூலை 6 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் இணையத்தின் ஊடாக விண்ணப்பிக்கவும் முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எக்காரணம் கொண்டும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலக்கெடு நீட்டிக்கப்படமாட்டாது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு