யாழ்.நயினாதீவில் கூரை பிரித்து விட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்! 22 பவுண் நகைகள் கொள்ளை..

ஆசிரியர் - Editor I
யாழ்.நயினாதீவில் கூரை பிரித்து விட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்! 22 பவுண் நகைகள் கொள்ளை..

யாழ். ழநயினாதீவில் 36 இலட்சம் ரூபாய் பெறுமதியான 22 பவுண்  நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

நயினாதிவு 5ம் வட்டார பகுதியில் 13ம் திகதி இரவு இரண்டு பெண்கள் மட்டும் வசித்துவரும் வீட்டில் அவர்கள் உறக்கத்தில் இருந்த போது வீட்டுக் கூரையை  உடைத்து வீட்டில் இறங்கிய கொள்ளையர்கள் கைப்பை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த 22 பவுண் நகைகளை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.

காலை வீட்டினுடைய அறையை திறந்து பார்க்கின்றபோது கைப்பை காணாமல் இருந்தமையால் அதிலிருந்து நகைகள் கைப்பையுடன் கொள்ளையடிக்கப்பட்டமை தெரிய வந்தநிலையில் ஊர்காவற்றுறை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

யாழ்ப்பாணம் தடயவியல் பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு