துருக்கியில் தொடரும் சோகம்!! -நிலநடுக்க பலி எண்ணிக்கை 16,000 கடந்தது-

ஆசிரியர் - Editor II
துருக்கியில் தொடரும் சோகம்!! -நிலநடுக்க பலி எண்ணிக்கை 16,000 கடந்தது-

துருக்கி - சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்கிக்கை 16 ஆரத்தை கடந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை துருக்கியை நிலநடுக்கம் தாக்கியது. மேலும் 100 வருடங்களுக்குப் பின் இப்பகுதியைத் தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும்.

ரிச்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான் போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்க பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று பிற்பகல் நிலவரப்படி உயிரிழப்பு 11 ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில் இன்று வியாழக்கிழமை நண்கபல் நிலவரப்படி துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை மேலும் உயர்ந்து 16 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இன்னும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதால், பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு