யாழ்.அரியாலையில் பாதுகாப்பற்ற புகைரத கடவையை கடக்க முயன்ற முதியவர் ரயில் மோதி பலி..!

ஆசிரியர் - Editor I
யாழ்.அரியாலையில் பாதுகாப்பற்ற புகைரத கடவையை கடக்க முயன்ற முதியவர் ரயில் மோதி பலி..!

யாழ்.அரியாலையில் ரயில் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று காலை இடம்றெ்றிருக்கின்றது. 

சம்பவத்தில் புதிய செம்மணி வீதி கல்வியங்காடு பகுதியை சேர்ந்த போலி தனஞ்சயன் (வயது78) என்ற முதியவரே உயிரிழந்துள்ளார். 

துவிச்சக்கரவண்டியில் அரியாலையில் ஏவி வீதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முற்பட்டபோது ரயில் மோதியுள்ளது. 

குறித்த வயோதிபருக்கு ஏற்கனவே ஒருகண் பார்வையில்லாமலும் காது கேட்காத நிலையில் கடவையை கடக்கும்போது விபத்து ஏற்பட்டுள்ளது. 

என விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு