நாடு முழுவதும் 13ம் திகதி தொடக்கம் 19ம் திகதிவரை மின்வெட்டு..! நாட்டு மக்களுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
நாடு முழுவதும் 13ம் திகதி தொடக்கம் 19ம் திகதிவரை மின்வெட்டு..! நாட்டு மக்களுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு..

நாடு முழுவதும் எதிர்வரும் 13ம் திகதி தொடக்கம் 19ம் திகதிவரை சுழற்சி முறையிலான மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்திருக்கின்றது. 

இதற்கமைய, 13,15,16,17,18 ஆகிய தினங்களில் A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 2 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

அத்துடன், 14 மற்றும் 19ஆம் திகதிகளில் A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் ஒரு மணித்தியாலமும் மின்துண்டிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு