யாழ்ப்பாணம் தீவக மக்களுக்கான மண்ணெண்ணெய் கொழும்பை வந்தடைந்தது..!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் தீவக மக்களுக்கான மண்ணெண்ணெய் கொழும்பை வந்தடைந்தது..!

யாழ்.தீவக மீனவர்களின் கோரிக்கைக்கு அமைவாக இந்தியாவினால் வழங்கப்பட்ட 15 ஆயிரம் லீற்றர் மண்ணெண்ணெய் கொழுப்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 

நாட்டில் உருவாகியுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டினால் யாழ்.மாவட்ட மீனவர்களும் அதிகளவில் பாதிப்புக்களை எதிர்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தீவக மீனவர்களின் கோரிக்கைக்கு அமைய, 

இந்தியா 15 ஆயிரம் லீற்றர் மண்ணெண்ணெய் வழங்கியுள்ளது. அவை கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ள நிலையில், தற்போது தரையிறக்கும் பணிகள் இடம்பெறுகிறது. 

அடுத்தகட்டமாக யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டு தீவக மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு