அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை..! பதுக்கல் பேர்வழிகள், மோசடிக்காரர்களுக்கு இனி இடமில்லை..

ஆசிரியர் - Editor I
அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை..! பதுக்கல் பேர்வழிகள், மோசடிக்காரர்களுக்கு இனி இடமில்லை..

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இடம்பெறும் மோசடிகள் மற்றும் பதுக்கல் பேர்வழிகளின் நடவடிக்கைகள் போன்றவற்றை கட்டுப்படுத்துவதற்காக கையடக்க தொலைபேசி செயலி ஒன்றினை பொலிஸ் திணைக்களத்தின் கணனி பிரிவு உருவாக்கியிருக்கின்றது. 

வாகனம் ஒன்று எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குச் சென்று எரிபொருள் நிரப்பும் போது, ​​அதன் பதிவு எண் தொடர்பான தரவுகள் செயலியில் உள்ளிடப்படும். இதனூடாக குறித்த வாகனம் எரிபொருளை பெற்றுக் கொண்ட தகவலை மற்றய எரிவாயு நிலையத்தினர் அறிய முடியும்.

இந்த செயலி பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு