அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! தனியார் ஊழியர்களுக்கு சற்று ஆறுதலான செய்தி..!

ஆசிரியர் - Editor I
அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! தனியார் ஊழியர்களுக்கு சற்று ஆறுதலான செய்தி..!

மிக விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிவாரண வரவுசெலவு திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பவம் அதிகரிக்கப்படும். என பிரதமர் ரணில் விங்கிரமசிங்க கூறியிருப்பதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

நாட்டில் தற்போது அதிகரித்துள்ள வாழ்க்கை செலவை எதிர்கொள்ளும் வகையில் இந்த தீர்மானத்தை பிரதமர் எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.  2015ம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தினால் 

அரச ஊழியர்களுக்கு 10000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட்டது. இதன்படி, வாழ்க்கை செலவு அதிகரிக்கப்பட்டுள்ளதை கருத்திற் கொண்டு, அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு, 

வரவு செலவுத்திட்டத்தை தயாரிக்கும் குழுவிற்கு, பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார். அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பிற்கு ஏற்றவாறு, தனியார் துறையினரது சம்பளத்தை அதிகரிக்கும் வகையிலும்,

நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, வரவு செலவுத்திட்டத்தை தயாரிக்கும் குழுவிற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு