இராணுவ தளபதி பதவியை இராஜினாமா செய்கிறார் ஜெனரல் சவேந்திர சில்வா..!

ஆசிரியர் - Editor I
இராணுவ தளபதி பதவியை இராஜினாமா செய்கிறார் ஜெனரல் சவேந்திர சில்வா..!

இலங்கை இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது. 

இந்நிலையில் புதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே நியமிக்கப்படவுள்ளார். 

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மே மாதம் 31 ஆம் திகதியுடன் இராணுவத் தளபதி பதவியில் இருந்து ராஜினாமா செய்யவுள்ளார்.

இந்நிலையில், எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே பதவியேற்கவுள்ளார்.

இதேவேளை, முப்படைகளின் பிரதானியாக ஜெனரல் சவேந்திர சில்வா உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பெறுப்பேற்கவுள்ளதாக 

இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு