இன்றும் சுழற்சி முறையிலான மின்வெட்டு தொடரும்..! அட்டவணை வெளியானது...

ஆசிரியர் - Editor I
இன்றும் சுழற்சி முறையிலான மின்வெட்டு தொடரும்..! அட்டவணை வெளியானது...

நாடு முழுவதும் இன்றைய தினமும் சுழற்சி முறையினால மின்வெட்டு அமுலாகும். என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரமும், 

மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரு மணி நேரமும் 40 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாகவுள்ளது.

மேலும் கொழும்பு முன்னுரிமை வலயங்களில் (CC) காலை 6 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதியினுள் 3 மணிநேரம் மின்வெட்டு அமுலாகும்.

என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு