கொழும்பு வன்முறைகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டு..! நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த கைது..

ஆசிரியர் - Editor I
கொழும்பு வன்முறைகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டு..! நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த கைது..

கொழும்பு வன்முறைகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த சற்றுமுன் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கடந்த 9 ஆம் திகதி அலரி மாளிகை மற்றும் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சனத் நிஷாந்த உள்ளிட்ட 22 பேரை கைது செய்யுமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு சட்டமா அதிபர் திணைக்களம் நேற்றைய தினம் பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு